/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தந்தையை காணவில்லை : போலீசில் மகன் புகார்
/
தந்தையை காணவில்லை : போலீசில் மகன் புகார்
ADDED : அக் 27, 2025 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: வீட்டில் கோபித்து கொண்டு வெளியே சென்ற தந்தையைக் காணவில்லை என மகன், போலீசில் புகார் அளித்துள்ளார்.
விழுப்புரம், பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு, 58; குடிப்பழக்கம் உடைய இவர், தினமும் மது அருந்தியதால் அவரது மகன் பிரகாஷ் கண்டித்துள்ளார். இதனால், மனமுடைந்த அவர், கடந்த மாதம் 30ம் தேதி கோபித்து கொண்டு சென்னைக்கு கூலி வேலைக்குச் செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

