/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மயிலம் முருகன் கோவிலில் தீபாவளி சிறப்பு வழிபாடு
/
மயிலம் முருகன் கோவிலில் தீபாவளி சிறப்பு வழிபாடு
ADDED : நவ 01, 2024 06:32 AM

மயிலம்: மயிலம் முருகன் கோவிலில் தீபாவளி பண்டிகை சிறப்பு வழிபாடு நடந்தது.
மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் கோவிலில் நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிகாலை 6:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு வழிபாடுகள் நடந்தது.
காலை 11:00 மணிக்கு பாலசித்தர், விநாயகர் வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமிக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு வழிபாடு, மகா தீபாராதனை நடந்தது. மூலவர் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
மாலை 6:00 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள வள்ளி தெய்வானை சுப்பிரமணிய சுவாமிக்கு பால், சந்தனம், பன்னீர், தேன், இளநீர் உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் அபிஷேகம் செய்தனர்.
இரவு 8:00 மணிக்கு உற்சவர் கிரிவலம் நடந்தது.
ஏற்பாடுகளை மயிலம் ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.