/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மக்கள் சிறப்பு குறைதீர்வு கூட்டம்
/
மக்கள் சிறப்பு குறைதீர்வு கூட்டம்
ADDED : ஏப் 14, 2025 04:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு சார்பில் பொதுமக்கள் சிறப்பு குறை தீர்வு கூட்டம் நடந்தது.
விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் ஏ.டி.எஸ்.பி.,க்கள் திருமால், தினகரன் மேற்பார்வையில் நடந்த பொதுமக்கள் குறைதீர்வு கூட்டத்திற்கு, டி.எஸ்.பி., ராமலிங்கம் தலைமை தாங் கினார்.
இன்ஸ்பெக்டர் தாரகேஸ்வரி, சப்இன்ஸ் பெக்டர்கள் ராஜலட்சுமி, வினோத்ராஜ் மக்களின் மனுக்களை பெற்றனர்.
25 மனுக்கள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. 13 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது.
மீதமுள்ள மனுக்கள் மீது உரிய விசாரணை செய்ய அதிகாரிகள் மூலம் உத்தரவிடப்பட்டது.

