/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நாய்கள் கடித்து புள்ளி மான் பலி
/
நாய்கள் கடித்து புள்ளி மான் பலி
ADDED : டிச 23, 2025 06:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே குடிநீர் தேடி வந்த புள்ளி மானை நாய்கள் கடித்ததில் சிகிச்சை பலனின்றி இறந்தது.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பெண்ணைவளம் வனப்பகுதியில் மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. வனப்பகுதியில் இருந்து நேற்று, குடிநீர் தேடி வந்த புள்ளி மானை தெரு நாய்கள் துரத்திச் கடித்தன.
உடன் அப்பகுதி மக்கள் மானை மீட்டு வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்குச் சென்ற வனத்துறை அதிகாரிகள் மானை சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி மாலை இறந்தது. உடன், மானின் உடலை பிரேத பரிசோதனை செய்து புதைத்தனர்.

