/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
/
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
ADDED : ஆக 07, 2025 02:46 AM

வானுார்: வானுார் ஒன்றியத்திற்குட்பட்ட வி.பரங்கனி பகுதியில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நேற்று நடந்தது.
தனியார் மண்டபத்தில் நடந்த, முகாமை லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி துவக்கி வைத்தார். விழாவில், தோட்டக்கலை துறை சார்பில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தின் கீழ் காய்கறி விதை தொகுப்புக்கள் வழங்கப்பட்டன.
டி.பரங்கனி, புதுக்குப்பம், காயல்மேடு, கிளாப்பாக்கம் ஆகிய நான்கு ஊராட்சிகளுக்கு நடந்த முகாமில், ஏராளமானோர் கலந்து கொண்டு மனுக்களை வழங்கினர்.
நிகழ்ச்சிக்கு ஒன்றிய சேர்மன் உஷா முரளி, பருவகீர்த்தனா விநாயகமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், ஊரக வளர்ச்சிதுறை, தீயணைப்புதுறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள், மக்களுக்கு விண்ணப்பம் எழுதி தர தன்னார்வலர்களாக பணியில் இருந்தனர்.
நிகழ்ச்சியில், பி.டி.ஓ.,க்கள் மணிவண்ணன், சுபாஷ்சந்திரபோஸ், வானுார் தாசில்தார் வித்யாதரன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் புஷ்பராஜ், மாரிமுத்து, திமுக., ஒன்றிய செயலாளர்கள் முரளி, ராஜூ, மைதிலி ராஜேந்திரன், புஷ்பராஜ், முன்னாள் ஒன்றிய சேர்மன் சிவா உட்பட பலர் கலந்து கொண்டனர்.