/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
/
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
ADDED : செப் 25, 2025 03:49 AM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி ஒன்றியம் ராதாபுரத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமினை மாவட்ட சேர்மன் துவக்கி வைத்தார்.
தனியார் திருமண மண்டபத்தில் நடந்த முகாமிற்கு ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவிதுரை தலைமை தாங்கினார்.
உதவி திட்ட அலுவலர் ராஜேந்திரன், பி.டி.ஓ.,சையது முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர் .பி.டி.ஓ., நாராயணன் வரவேற்றார்.
மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்று முகாமினை துவக்கி வைத்து பேசினார்.
இதில் மதுரப்பாக்கம், தென்னவராயன்பட்டு, மூங்கில்பட்டு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மனுக்களை அரசு அதிகாரிகளிடம் கொடுத்தனர்.
தாசில்தார் செல்வமூர்த்தி, சமூக நல தாசில்தார் வேல் முருகன் ,தேர்தல் தனி தாசில்தார் பாரதிதாசன்,வட்ட வழங்கல் அலுவலர் ராஜேஷ் , மேலாளர் கலைவாணி, மண்டல துணை பி.டி.ஓ.,க்கள் வசந்தி, சுந்தர்ராஜன், பாபு, கலைவாணி, மாவட்டகவுன்சிலர் மீனா வெங்கடேசன், ஒன்றிய செயலாளர் ரவிதுரை, ஒன்றிய தலைவர் முரளி, ஒன்றிய கவுன்சிலர்கள் கஸ்துாரி பாண்டியன், மகேஸ்வரி பாஸ்கர், செந்தில்குமார்,ஊராட்சி மன்ற தலைவர்கள் கஜேந்திரன்,குமாரி அர்ச்சசுணன்,முருகன், நிர்வாகிகள் ராஜசேகர்,செல்வராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.