ADDED : அக் 03, 2025 02:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை; மேல்மலையனுார் அடுத்த பரையந்தாங்கல் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது.
ஒன்றிய சேர்மன் கண்மணி நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் ஏழுமலை வரவேற்றார். மஸ்தான் எம்.எல்.ஏ., பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று, நலத்திட்ட உதவிகளை வழங்கி, பேசினார்.
பரையந்தாங்கல், சாத்தாம்பாடி, சிறுதலைப்பூண்டி கிராம மக்கள்மனுக்களை அளித்தனர்.
நிகழ்ச்சியில், பி.டி.ஓ., க்கள், ஜெய்சங்கர், சீதாலட்சுமி, துறை சார்ந்த அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.