sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை; வெள்ளி காசு பரிசளித்து வரவேற்பு

/

அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை; வெள்ளி காசு பரிசளித்து வரவேற்பு

அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை; வெள்ளி காசு பரிசளித்து வரவேற்பு

அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை; வெள்ளி காசு பரிசளித்து வரவேற்பு


ADDED : ஆக 19, 2025 12:30 AM

Google News

ADDED : ஆக 19, 2025 12:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்; விழுப்புரம் அருகே அரசு தொடக்கப் பள்ளியில், மாணவர் சேர்க்கையை ஊக்கப்படுத்தும் விதத்தில் வெள்ளிக் காசு பரிசளித்து வரவேற்றனர்.

கோலியனுார் அடுத்த வி.அரியலுார் அரசு தொடக்கப் பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு வரை 35 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளியில், ஆண்டு தோறும் மாணவர்கள் சேர்க்கையை ஊக்கப்படுத்தும் வகையில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் விதவிதமான சலுகைகள் வழங்கி வரவேற்பளித்து வருகின்றனர்.

இந்தாண்டு புதிதாக சேர்ந்த மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதத்தில் மாணவ, மாணவிகளுக்கு தலா 10 கிராம் வெள்ளி நாணயம் பரிசாக வழங்கப்பட் டது.

புதிய மாணவர்களை வரவேற்கும் விழா நேற்று நடந்தது. ஊராட்சி தலைவர் தமிழரசி பழனி தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் அமுதவள்ளி வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வளர்மதி பாலசுப்ரமணியன், புதிதாக 1ம் வகுப்பு சேர்ந்த 6 மாணவர்களுக்கு தலா 10 கிராம் வெள்ளி நாணயம், நோட்டு, புத்தகத்தை வழங்கினார்.

ஊராட்சி துணைத் தலைவர் வினோத், ஓவியர் முருகன், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us