செஞ்சி : சாலையோரம் நடந்து சென்ற கல்லுாரி மாணவர் பைக் மோதி உயிரிழந்தார்.
செஞ்சி அடுத்த ரெட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் ரித்விக், 19; திருவண்ணாமலை அரசு கலை கல்லுாரியில், பி.காம்., 2ம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு 8:00 மணியளவில் செஞ்சி திருவண்ணாமலை பிரதான சாலையில், ரெட்டிப்பாளையம் சர்ச் அருகே திருவண்ணாமலை மார்க்கமாக நடந்து சென்று கொண் டிருந்தார். அப்போது திருவண்ணாமலை மாவட்டம் நாடந்தல் கிராமத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் அய்யப்பன், 23; அதிவேகமாக ஓட்டி வந்த பைக் ரித்விக்கின் பின்பக்கம் மோதியது.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். பைக்கை ஓட்டி வந்த அய்யப்பன், அவருடன் பைக்கில் வந்த பாலாஜி ,19; ஆகியோர் காயமடைந்தனர். இவர்கள் செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.