ADDED : செப் 25, 2024 05:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்,: விழுப்புரத்தில் கல்லுாரி மாணவி காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் மகள் நிவாஞ்சலி, 19; தனியார் கல்லுாரியில் பி.காம்., முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர், கடந்த 21ம் தேதி விழுப்புரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.