/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஜான்டூயி இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ., பள்ளியில் மாணவர் பதவியேற்பு
/
ஜான்டூயி இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ., பள்ளியில் மாணவர் பதவியேற்பு
ஜான்டூயி இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ., பள்ளியில் மாணவர் பதவியேற்பு
ஜான்டூயி இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ., பள்ளியில் மாணவர் பதவியேற்பு
ADDED : ஜூலை 08, 2025 11:43 PM

விழுப்புரம்; விழுப்புரம் ஜான்டூயி இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ., சீனியர் செகண்டரி பள்ளியில் மாணவர் தலைமை பதவியேற்பு விழா நடந்தது.
தாளாளர் வீரதாஸ் தலைமை தாங்கினார். கல்வி நிர்வாக இயக்குநர் எமர்சன் ராபின், தலைவர் வாலண்டினா லெஸ்லி முன்னிலை வகித்தனர்.
நிர்வாக தலைவர் சுகன்யா ராபின், இணை செயலாளர் நித்தின் ஜோஸ்வா, முதல்வர் விஜயா, துணை முதல்வர் தனலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில், மாணவர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. தொடர்ந்து, கடந்த ஆண்டு தலைவர்களாக பதவி வகித்தோர், இந்தாண்டிற்குரிய மாணவ தலைவர்கள் கொடுத்த பரிசை பெற்று கொண்டு, தங்களின் பதவியை இந்தாண்டிற்குரிய மாணவர்களுக்கு வழங்கினர்.
பின், மாணவர் தலைவர், தலைவி, கலை இலக்கிய தலைவர், நன்னடத்தை தலைவர் விளையாட்டு தலைவர் ஆகியோர் பதவியேற்று உறுதிமொழி ஏற்றனர். டைமண்ட், எமரால்டு, சபையர், ஓப்பல் ஆகிய அணிகளின் தலைவர்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆழிவாசன் பதவியை வழங்கி, தன்னம்பிக்கையாடு வளர்வது பற்றியும், தலைமை பண்பை உருவாக்கும் முறைகள், தலைவர் செயல்பாடு, விளையாட்டு உடலை மேம்படுத்தும் வீதம் பற்றி கூறினார். இதில், பெற்றோர்கள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.