ADDED : ஜூலை 30, 2025 11:21 PM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: கல்லுாரி மாணவி காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் அடுத்த ராமானுஜபுரம் பகுதியை சேர்ந்த மோகன் மகள் ஷாலினி,18; இவர் விழுப்புரம் அரசு மகளிர் கல்லூரியில் பி.ஏ., படித்து வருகிறார்.
கடந்த 28ம் தேதி கல்லுாரிக்கு சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து, மாணவியை தேடி வருகின்றனர்.
