/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வடக்கு மாவட்ட காங்., நிர்வாகிகள் பதவிக்கு விருப்ப மனு வழங்கல்
/
வடக்கு மாவட்ட காங்., நிர்வாகிகள் பதவிக்கு விருப்ப மனு வழங்கல்
வடக்கு மாவட்ட காங்., நிர்வாகிகள் பதவிக்கு விருப்ப மனு வழங்கல்
வடக்கு மாவட்ட காங்., நிர்வாகிகள் பதவிக்கு விருப்ப மனு வழங்கல்
ADDED : பிப் 21, 2026 04:54 AM

திண்டிவனம்: விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்., நிர்வாகிகள் பதவிக்கான விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சி திண்டிவனத்தில் துவங்கியது.
விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்., தலைவர் ரங்கபூபதி, வடக்கு மாவட்ட காங்., கட்சியில் நகர தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான விருப்ப மனு நேற்று 20ம் தேதி முதல் வரும் 23ம் தேதி வரை கட்சியினர் கொடுக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து திண்டிவனத்தில் உள்ள நகர காங்., அலுவலகத்தில் நேற்று காலை கட்சியினரிடம் விருப்ப மனு விநியோகிக்கும் நிகழ்ச்சி மற்றும் பூர்த்தி செய்யப்ப்பட்ட மனுக்களை பெறும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் திண்டிவனம் தொகுதி பொறுப்பாளர் விஜயன், நிர்வாகிகள் மணி, சீத்தராமன், சண்முகம், ஜனார்த்தன் ஆகியோர் கட்சியினருக்கு விருப்ப மனுக்களை வழங்கினர்.
நேற்று நடந்த நிகழ்ச்சியில் நகர தலைவர், வட்டார தலைவர்கள், மாவட்ட துணை தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்காக 120 மனுக்கள் வழங்கப்பட்டன. இதில் பூர்த்தி செய்யப்பட்ட 29 மனுக்கள் கட்சியினரிடமிருந்து பெறப்பட்டன.

