ADDED : ஜன 23, 2025 05:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம்: வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மயிலம் அருகே உள்ள பரிக்கப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராமசந்திரன், 54; வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால மனமுடைந்த அவர் கடந்த 21ம் தேதி இரவு வயலுக்கு பயன்படுத்தும் பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.
ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனில்லாமல் இறந்துவிட்டார். மயிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.