/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
/
தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : செப் 19, 2024 11:27 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் உலக தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
கல்லுாரி டீன் ரமாதேவி தலைமை தாங்கி ஊர்வலத்தை துவக்கி வைத்தார். ஊர்வலம், மருத்துவமனை, பைபாஸ் சாலை வரை சென்றது. ஊர்வலத்தில், பொதுமக்களிடம் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மன நலத்துறைத் தலைவர் புகழேந்தி, உதவி பேராசிரியர் மணிகண்டன், துணை முதல்வர் தரணி, மருத்துவ கண்காணிப்பாளர் தரனேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.