ADDED : ஜூலை 19, 2025 03:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : அன்னியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், தமிழ்நாடு நாள் விழா நடந்தது.
கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) அசோகன் தலைமை தாங்கினார். மாணவர் ஜீவானந்தம் வரவேற்றார். பேராசிரியர் சுவாமிநாதன் பேசினார். அரியபுத்திரன் முன்னிலை வகித்தார். பேராசிரியர்கள் மணவாளன், ரங்கநாதன், பாபு வாழ்த்தி பேசினர்.
பேராசிரியர்கள் சின்னதுரை, கோவிந்தராஜன், ரம்யா, நித்தியானந்தன், கிருஷ்வர், நித்யா, விஜயலட்சுமி, வெங்கடேசன், கலைவாணி உட்பட பலர் பங்கேற்றனர். பேராசிரியர் சுமதி நன்றி கூறினார்.