sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலையில் மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்பு

/

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலையில் மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலையில் மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலையில் மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்பு


ADDED : மார் 06, 2024 02:16 AM

Google News

ADDED : மார் 06, 2024 02:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரம் அரசு கலை அறிவியல் கல்லுாரியில், தமிழ்நாடு திறந்த நிலை பல்கலையின் இந்தாண்டு பகுதி நேர படிப்புக்கான மாணவர் சேர்க்கை துவங்கியது.

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கல்லுாரி முதல்வர் சிவக்குமார் செய்திக்குறிப்பு:

விழுப்புரம் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் மூலம் 2024 ஜனவரி முதல் டிசம்பர் 2024 வரை, இந்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது.

பகுதி நேர படிப்பை தொடர விரும்பும் மாணவ, மாணவியர்கள் மற்றும் உயர் கல்வியை எதிர்நோக்கி காத்திருக்கும் அலுவலர்களுக்காக, கல்லுாரியில் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகம், பல்கலைக்கழக மானிய குழுவால் அங்கிகரிக்கப்பட்டுள்ளது.

கல்லுாரியில் உள்ள அனைத்து இளங்கலை பாடப்பிரிவுகளான, பி.ஏ., தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், பி.காம்., வணிகவியல், பி.எஸ்சி., கணிதம், பி.சி.ஏ., மற்றும் முதுகலை எம்.ஏ., தமிழ், ஆங்கிலம், வரலாறு, எம்.காம்., வணிகவியல், எம்.எஸ்.சி., கணிதம் ஆகிய பாடங்களை, தமிழக அரசின் உத்தரவின்படி, அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லுாரியில் நடத்த அனுமதி அளித்துள்ளது.

இதற்கான படிப்புகள் சனி, ஞாயிறு ஆகிய நாட்களிலும் மற்றும் இதற்கான பருவ தேர்வுகளும் இக்கல்லுாரியிலேயே நடைபெறும்.

படிப்பிற்கான சேர்க்கை விண்ணப்பங்கள், விழுப்புரம் கல்லுாரி அலுவலகத்தில் வழங்கப்படுகிறது. விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வரும் 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

அனைத்து மாணவ, மாணவியர் மற்றும் உயர் கல்வி வாய்ப்பினை எதிர்நோக்கியுள்ள அலுவலர்களும், இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, விழுப்புரம் மாவட்டத்தை 100 சதவீத உயர்கல்வி பெற்ற மாவட்டமாக உயர்த்த ஒத்துழைக்க வேண்டும்.

தமிழ்நாடு திறந்தவெளிப் பல்கலைக்கழகம் வழியாக இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள், பின்பு யூ.பி.எஸ்.சி., - டி.என்.பி.எஸ்.சி., மற்றும் மத்திய, மாநில அரசு போட்டித் தேர்வுகளை எழுதலாம்.

மேலும், அவர்கள் நேரடியாக முதுகலை படிப்புகளிலும் சேரலாம். முதுகலை படிப்பு முடித்தவர்கள் செட், நெட், கேட் ஆகிய தேர்வுகளையும் எழுதலாம். நேரடி வகுப்புகளில் பி.எச்டி., படிப்பிலும் சேரலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us