sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 டாஸ்மாக்கில் காலி மதுபாட்டில் திரும்ப பெறும் திட்டம் நாளை முதல் அமல் கலெக்டர் தகவல்

/

 டாஸ்மாக்கில் காலி மதுபாட்டில் திரும்ப பெறும் திட்டம் நாளை முதல் அமல் கலெக்டர் தகவல்

 டாஸ்மாக்கில் காலி மதுபாட்டில் திரும்ப பெறும் திட்டம் நாளை முதல் அமல் கலெக்டர் தகவல்

 டாஸ்மாக்கில் காலி மதுபாட்டில் திரும்ப பெறும் திட்டம் நாளை முதல் அமல் கலெக்டர் தகவல்


ADDED : நவ 26, 2025 07:29 AM

Google News

ADDED : நவ 26, 2025 07:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெற்றுக்கொள்ளும் திட்டம் நாளை (27ம் தேதி) முதல் அமலுக்கு வருகிறது.

கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு;

விழுப்புரம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களை விளை நிலங்கள், பொது இடங்கள் மற்றும் சாலைகளில் காலியாக விட்டு செல்வதை தடுக்கும் பொருட்டு வாடிக்கை யளர்கள், மதுபாட்டில்களை வாங்கி சென்று அருந்திய பின் காலி பாட்டில்களை அதே டாஸ்மாக் கடைகளில் திரும்ப பெற்றுக்கொள்ளும் திட்டம் சென்னை உயர்நீதிமன்ற ஆணைப்படி நாளை (27ம் தேதி) முதல் அமலுக்கு வருகிறது.

டாஸ்மாக் கடைகளில், விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களை அடையாளம் காணும் வகையில் மதுப்பாட்டில்கள் மீது கடை எண் குறிப்பிட்டு 10 ரூபாய் என அச்சிடப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும்.

ஒவ்வொரு மதுப்பாட்டில்கள் விற்பனை செய்யும்போது அதிக பட்ச சில்லறை விற்பனை விலையுடன் சேர்த்து கூடுதலாக 10 ரூபாய் பெறப்படும்.

அவ்வாறு வாடிக்கையாளர்கள் டாஸ்மாக் கடைகளில் இருந்து வாங்கும் மதுபாட்டில்களை அதில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கரோடு, அதே டாஸ்மாக் கடைகளில் காலியாக திரும்ப ஒப்படைக்கும் போது ஏற்கனவே பெறப்பட்ட 10 ரூபாய் திரும்ப வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us