ADDED : அக் 05, 2024 11:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: காணை அருகே சகோதரர்களை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
காணை அடுத்த கப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சமுத்து மகன் நாராயணன், 30; ஆட்டோவில் காய்கறி வியாபாரம் செய்கிறார். இவர், நேற்று முன்தினம் கோனுாரில் வியாபாரம் செய்த போது, அதே கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மகன் மதியழகன்,27; குடிபோதையில் தகராறு செய்தார்.
இதையறிந்த நாராயணன் உறவினர் வினாயகமூர்த்தி, 31; இவரது தம்பி வீரா, 28; ஆகியோர் மதியழகனிடம் தட்டிக் கேட்டனர். ஆத்திரமடைந்த மதியழகன், சகோதரர்கள் இருவரையும் தாக்கினார்.
புகாரின் பேரில், காணை போலீசார் வழக்குப் பதிந்து மதியழகனை கைது செய்தனர்.