/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
உடல் நலம் பாதித்த தொழிலாளி சாவு
/
உடல் நலம் பாதித்த தொழிலாளி சாவு
ADDED : பிப் 15, 2024 06:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம், : வளவனுார் அருகே உடல் நலம் பாதித்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
வளவனுார் அருகே குமாரக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் மகன் எழிலரசன்,25; கூலி தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் அதே கிராமத்தை சேர்ந்த தவசி, தனுஷ் ஆகியோரோடு மதுபானம் அருந்த சென்றார்.
அப்போது திடீரென எழிலரசன் உடல்நலம் பாதித்து புதுச்சேரி மாநிலம், மதகடிப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், எழிலரசன் இறந்ததை உறுதி செய்தனர். வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

