நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் இளம்பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் வண்டிமேடு பகுதியைச் சேர்ந்த வீரமணி மகள் கிருஷ்ணவேணி,19; இவர், நர்சிங் படித்து முடித்துவிட்டு, வீட்டில் இருந்து வந்துள்ளார். கடந்த 8ம் தேதி, வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்கு பதிந்து, கிருஷ்ணவேணியை தேடி வருகின்றனர்.

