ADDED : அக் 24, 2024 12:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை, : பெருவளூரில் நாடக மேடையை எம்.எல்.ஏ., மஸ்தான் திறந்து வைத்தார்.
மேல்மலையனுார் அடுத்த பெருவளூர் கிராமத்தில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 8 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய நாடக மேடை திறப்பு விழா நடந்தது.
ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன், பெருமாள் முன்னிலை வகித்தனர்.
ஊராட்சி தலைவர் கந்தவேல் வரவேற்றார். எம்.எல்.ஏ., மஸ்தான் நாடக மேடையை திறந்து வைத்து பேசினார்.
இதில் மாவட்ட கவுன்சிலர்கள் சாந்தி, செல்வி ராமசரவணன், துணை தலைவர் சையத்பஷீர் , கிராம மக்கள் கலந்து கொண்டனர்.