sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மின்வாரிய ஊழியர் வீட்டில் திருட்டு

/

மின்வாரிய ஊழியர் வீட்டில் திருட்டு

மின்வாரிய ஊழியர் வீட்டில் திருட்டு

மின்வாரிய ஊழியர் வீட்டில் திருட்டு


ADDED : மே 31, 2025 11:54 PM

Google News

ADDED : மே 31, 2025 11:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் மின்வாரிய ஊழியர் வீட்டில் திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம் பூந்தோட்டம், நாராயணன் நகரைச் சேர்ந்த பிரகாஷ், 46; மின் வாரியத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் வீட்டின் அறையில் குடும்பத்துடன் துாங்கிக் கொண்டிருந்தார்.

நள்ளிரவு வீட்டின் மாடி வழியாக கதவை உடைத்து உள்ளே புகுந்த 2 மர்ம நபர்கள் அறையில் இருந்த பீரோவை உடைக்க முயன்றபோது அங்கு துாங்கிக் கொண்டிருந்த பிரகாஷ் எழுந்து கூச்சலிட்டார்.

உடன் அங்கிருந்த 2 மர்ம நபர்களும் தப்பியோடினர். பின்னர் வீட்டில் பார்த்தபோது, அறைக்கு வெளியே வைத்திருந்த விலை உயர்ந்த மொபைல்போன் மற்றும் அயர்ன் பாக்ஸ் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் திருடு போனது தெரியவந்தது. துாங்கியவர்கள் விழித்ததால் பீரோவில் இருந்த நகை, பணம் தப்பியது.

பிரகாஷ் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார் மற்றும் கைரேகை பிரிவு நிபுணர்கள் தடயங்களை சேகரித்து வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us