ADDED : ஜூன் 20, 2025 11:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரத்தில் லாரி பேட்டரிகளை திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
விக்கிரவாண்டி அடுத்த உலகலாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகப்பன், 44; இவர், விழுப்புரம் பழைய நகராட்சி அலுவலகத்தில், கடந்த 3 மாதமாக ஒப்பந்த அடிப்படையில் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார்.
நகராட்சி அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இவரின் லாரியில், நேற்று முன்தினம் மர்ம நபர், 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 2 பேட்டரிகள் திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து நாகப்பன் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து பேட்டரிகளை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.