ADDED : ஏப் 21, 2025 04:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி புவனேஸ்வரி உடனுறை புவனேஸ்வரர் கோவிலில் பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது.
சித்திரை மாத தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு கால பைரவருக்கு பால், தயிர், இளநீர் மற்றும் வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்து, செவ்வரளி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீப ஆராதனை நடந்தது.
பூஜை மற்றும் அபிஷேகங்களை ரவி குருக்கள் தலைமையில் வேதாத்திரி குருக்கள் செய்திருந்தார்.பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

