sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அங்காளம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

/

அங்காளம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

அங்காளம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

அங்காளம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை


ADDED : ஆக 09, 2025 11:19 PM

Google News

ADDED : ஆக 09, 2025 11:19 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது.

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ஆடி மாத பவுர்ணமியையொட்டி, நேற்று முன்தினம் மாலை திருவிளக்கு பூஜை நடந்தது.

அதிகாலை அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அம்மனுக்கு வெள்ளி கவச அலங்காரம் செய்தனர்.

மாலை 6:00 மணிக்கு வரலட்சுமி அலங்காரத்தில் இருந்த உற்சவர் முன்னிலையில், ஏராளமான பெண்கள் குத்து விளக்கேற்றி திருவிளக்கு பூஜை செய்தனர்.

இரவு 8:30 மணிக்கு மகா தீபாராதனையும், அர்ச்சனையும் நடந்தது. பெண்களுக்கு மங்கள பொருட்களை பிரசாதமாக வழங்கினர்.

விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறை உதவி ஆணையர் சக்திவேல், அறங்காவலர் குழு தலைவர் சேட்டு என்கிற ஏழுமலை, அறங்காவலர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us