ADDED : பிப் 11, 2025 06:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் கஞ்சா வைத்திருந்த மூவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் வெள்ளத்தங்கம் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ஊரல்கரை மேடு பகுதியில் ரோந்து சென்றனர்.
அங்கு கஞ்சா வைத்திருந்த அதே பகுதியை சேர்ந்த தோமாஸ் மகன் கிஷோர்,25; பானாம்பட்டு ரோட்டை சேர்ந்த ஜேம்ஸ் மகன் லாரன்ஸ்,20; சென்னை கோயம்பேட்டை சேர்ந்த திருநங்கை ஒருவர் உட்பட மூவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து 70 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

