sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 திண்டிவனம் புதிய பஸ் நிலையம் விரைவில் திறப்பு; மஸ்தான் தகவல்

/

 திண்டிவனம் புதிய பஸ் நிலையம் விரைவில் திறப்பு; மஸ்தான் தகவல்

 திண்டிவனம் புதிய பஸ் நிலையம் விரைவில் திறப்பு; மஸ்தான் தகவல்

 திண்டிவனம் புதிய பஸ் நிலையம் விரைவில் திறப்பு; மஸ்தான் தகவல்


ADDED : நவ 26, 2025 08:10 AM

Google News

ADDED : நவ 26, 2025 08:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: திண்டிவனம் புதிய பஸ் நிலையம் விரைவில் திறக்கப்படும் என மஸ்தான் எம்.எல்.ஏ., தெரிவித்தார்.

திண்டிவனம் நகராட்சி இந்திர காந்தி பஸ் நிலைய பழைய கட்டடங்கள் இடித்து, ரூ.4.23 கோடி மதிப்பில் புதிய தினசரி அங்காடி கட்டும் நடந்து வருகின்றது.

பஸ் நிலையத்தில் நடக்கும் பணிகளை மஸ்தான் எம்.எல்.ஏ., நேற்று ஆய்வு செய்தார். அப்போது, பஸ் நிலையம் எதிரில், சாலையில் பஸ்கள் வந்து திரும்பி செல்ல இடம் ஒதுக்கி தருமாறு தனியார் பஸ் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.

அப்போது மஸ்தான் எம்.எல்.ஏ., கூறுகையில்; பஸ் நிலையத்தில் பணிகள் முடிந்த பிறகு அனைத்து பஸ்களும் உள்ளே வந்து செல்லும். புதியதாக கட்டப்பட்டு வரும் நகராட்சி பஸ் நிலைய பணிகள் முடிந்துவிட்டது. இன்னும் 10 நாட்களில் திறப்பு விழா குறித்து அறிவிக்கப்படும். புதிய பஸ் நிலையம் திறந்தாலும், தற்போதுள்ள நகராட்சி பஸ் நிலையத்திற்கு வழக்கம் போல பஸ்கள் வந்து செல்லும் என கூறினார். ஆய்வின் போது, நகர தி.மு.க., செயலாளர் கண்ணன், முன்னாள் நகர செயலாளர் கபிலன் உட்பட பலர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us