sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

/

 மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

 மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

 மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்


ADDED : டிச 10, 2025 05:57 AM

Google News

ADDED : டிச 10, 2025 05:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே மணல் கடத்திய டிப்பர் லாரியை கனிம வளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து போலீசில் ஒப்படைத்தனர்.

விழுப்புரம் மாவட்ட கனிம வளத்துறை மண்டல பறக்கும் படை உதவி இயக்குனர் முத்து தலைமையிலான அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு பனையபுரம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருக்கனுார் பகுதியில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த டிப்பர் லாரியை நிறுத்திய போது டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு தப்பியோடினார்.

அதிகாரிகள் சோதனை செய்தபோது அதில் மூன்று யூனிட் மணல் கடத்தி வருவது தெரியவந்தது. லாரியை பறிமுதல் செய்து, விக்கிரவாண்டி போலீசில் ஒப்படைத்தனர்.

உதவி இயக்குனர் முத்து புகாரின் பேரில் வழக்குப்பதிந்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us