ADDED : செப் 11, 2025 11:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: வளவனுார் அருகே புகையிலை விற்ற ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
வளவனுார் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் மேல்பாதி கிராமத்தில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பெட்டிக்கடை ஒன்றில், அரசால் தடை செய்த புகையிலை பொருட்களை விற்பது கண்டறியப்பட்டது.
இது தொடர்பாக அதே கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் பிரபு,43; என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து 34 பாக்கெட்கள் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.