ADDED : அக் 13, 2025 12:28 AM

விழுப்புரம்; அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் கோட்ட அலுவலகத்தில், ஆய்வுக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, மேலாண்மை இயக்குநர் குணசேகரன் தலைமை தாங்கினார். பொதுமேலாளர் (தொழில் நுட்பம்) ரவீந்திரன், பொதுமேலாளர்கள் ஜெய்சங்கர், பாண்டியன், ஸ்ரீதரன், கிருஷ்ணமூர்த்தி, கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், அனைத்து கிளைகளிலும், புதுப்பித்தல் பிரிவுகள் மற்றும் அலுவலகங்களில் துாய்மையை கடைபடித்து, சிறப்பாக பணி புரிந்த அலுவலகங்கள் தேர்வு செய்யப்பட்டது. அதில், ஒரு மண்டலத்திற்கு 3 கிளைகள், 3 புதுப்பித்தல் பிரிவுகள் மற்றும் 3 அலுவலர்களுக்கு, கோட்ட ேமலாண்மை இயக்குநர் குணசேகரன் பரிசு வழங்கி பாராட்டினார்.
விழுப்புரம், கடலுார், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மண்டலங்களைச் சேர்ந்த துணை மேலாளர்கள், உதவி மேலாளர்கள், அலுவலர்கள், பணியாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.