/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆதி திராவிடர் நலத்துறை அலுவலர்கள் ஆய்வு கூட்டம்
/
ஆதி திராவிடர் நலத்துறை அலுவலர்கள் ஆய்வு கூட்டம்
ADDED : அக் 13, 2025 12:28 AM
விழுப்புரம்; விழுப்புரத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். அதில் அவர் பேசியதாவது:
மாவட்டத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், கடந்த நிதியாண்டில் வன்கொடுமையால், பாதித்த நபர்களுக்கு, உதவி தொகை எந்தவித நிலுவையுமின்றி உடனுக்குடன் வழங்கப்பட வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள டி.எஸ்.பி.,க்கள் வன்கொடுமை வழக்குகளை உடனே முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து வட்டாரங்களிலும் தீண்டாமை ஒழிப்பு குறித்து அலுவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு, வன்கொடுமை நிகழாமல் இருக்க பள்ளிகள், கல்லுாரிகள், விடுதிகளில் போலீசாரின் சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவின் சார்பில், 'ஒன்றிணைவோம்' என்ற அடிப்படையில் சமூக விழிப்புணர்வு தொடர் கூட்டங்கள் நடத்தப்படுகிறது.
அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ், முனைவோர்களுக்கான கடனுதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்து பகுதிகளிலும் விடுபட்டவர்களுக்கு, பட்டா வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில், எஸ்.பி., சரவணன், சப் கலெக்டர் ஆகாஷ், ஏ.எஸ்.பி., ரவீந்திரநாத் குப்தா, உதவி இயக்குநர் (வழக்கு நடத்துமை முகமை) கலா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் வளர்மதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.