sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

போக்குவரத்து கழக தொழிற்சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

/

போக்குவரத்து கழக தொழிற்சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

போக்குவரத்து கழக தொழிற்சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

போக்குவரத்து கழக தொழிற்சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்


ADDED : ஜன 03, 2024 12:10 AM

Google News

ADDED : ஜன 03, 2024 12:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரத்தில் போக்குவரத்து அண்ணா தொழிற்சங்க பேரவை மற்றும் கூட்டமைப்பு சங்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, அண்ணா தொழிற்சங்க விழுப்புரம் மண்டல பொறுப்பாளர் கணேசன் தலைமை தாங்கினார். நிர்வாக பணியாளர் சங்கம் தங்க பாண்டியன் வரவேற்றார்.

அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர்கள் பாஸ்கர், அய்யாக்கண்ணு, பாட்டாளி தொழிற் சங்க மண்டல தலைவர் ஞானதாஸ், மண்டல செயலாளர் தங்க குப்புசாமி, பொருளாளர் சிவாஜி, தே.மு.தி.க. தொழிற்சங்க மண்டல தலைவர் சேகர், மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன், பாட்டாளி தொழிற்சங்க மாநில தலைவர் ஞானமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில், ஓய்வு பெற்ற போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள பண பலன்களை உடனே வழங்க வேண்டும், 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே துவங்க வேண்டும்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொழிலாளர்களுக்கு தரமான உணவை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. அண்ணா தொழிற்சங்கம் அன்புச்செல்வன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us