/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு கல்லுாரி வளாகத்தில் மரக்கன்று நடும் விழா
/
அரசு கல்லுாரி வளாகத்தில் மரக்கன்று நடும் விழா
ADDED : மே 24, 2025 12:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லுாரி வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் தங்கராஜன் தலைமை தாங்கினார். தமிழ்த்துறை தலைவர் நாராயணன் முன்னிலை வகித்தார். தொழிலதிபர் சண்முகராமன் 400 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
விழாவில், வரலாற்றுத்துறை தலைவர் கமலக்கண்ணன், என்.எஸ்.எஸ்., அலுவலர் ஸ்ரீநாத்குமார், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் கோகுலகுமார், ஒய்.ஆர்.சி., அலுவலர் இளவழகன் மற்றும் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.