
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனம் டி.கே.பி., குழும நிறுவனர் கண்ணன் மூன்றாம் ஆண்டு நினைவு அஞ்சலி நடந்தது.
இதையொட்டி, திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ், அவரது படத்திற்கு விழுப்புரம் மாவட்ட தி.மு.க., இளைஞரணி துணை அமைப்பாளர் ரமேஷ் தலைமையில் மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது. பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கவுன்சிலர்கள் ரேகாநந்தகுமார், சுதாகர், பார்த்தீபன், பரணிதரன், முன்னாள் கவுன்சிலர் கிடங்கல் பாஸ்கர், தி.மு.க., மாவட்ட பிரதிநிதி முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

