நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அருகே பணம் வைத்து சூதாடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் தாலுகா காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் நேற்று சாலாமேடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, வேட்டப்பூர் ஏரிக்கரை அருகே ஆனாங்கூர் பகுதியைச் சேர்ந்த கோபால் மகன் கோகுல், 21; ராமானுஜபுரம் பகுதியைச் சேர்ந்த தனஞ்செழியன் மகன் விஜய், 25; ஆகியோர் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தனர். உடனடியாக அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த சீட்டு கட்டு மற்றும் பணம் ரூ.500யை பறிமுதல் செய்தனர். இது குறித்து, விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.