ADDED : பிப் 02, 2025 04:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை : அடையாளம் தெரியாத ஆண் சடலங்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் பக்தர்கள் தங்கும் ஷீட் கொட்டகையில் நேற்று முன்தினம் 45 வயது நபர் இறந்து கிடந்தார். இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து வி.ஏ.ஓ., கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில், மேல்மலையனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மற்றொரு சடலம்: திண்டிவனம், ஒலக்கூரிலிருந்து பாஞ்சாலம் செல்லும் சாலையிலுள்ள புல்லா குளத்தில் அழுகிய நிலையில் 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து வி.ஏ.ஓ.,சீனுவாசன் அளித்த புகாரின் பேரில், ஒலக்கூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.