/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திண்டிவனத்தில் மார்கழி மாத உபன்யாசம்
/
திண்டிவனத்தில் மார்கழி மாத உபன்யாசம்
ADDED : டிச 22, 2024 07:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம் : திண்டிவனம் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில், மார்கழி மாதத்தை முன்னிட்டு, திருப்பாவை உபன்யாச நிகழ்ச்சி நடந்தது.
ஆண்டாள் நாச்சியார் சபை சார்பில், மார்கழி மாதம் முழுவதும், காலை 6 மணியிலிருந்து 7 மணி வரை லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் உபன்யாசம் நடந்து வருகின்றது. இதேபோல், நேற்று காலை உபன்யாசம் நடந்தது.
இதில் பாகவதர்கள் ஆதனூர் மணிபெருமுக்கல் ஏழுமலை, ரெட்டணை ராயர், வீராசாமி, தென் பசார் செல்வமணி, மாசிலாமணி ஆகியோர் உபன்யாசம் நடத்தினர்.
இதில் ஆண்டாள் நாச்சியார் சபை நிர்வாகிகள் சிவராமன், பாண்டிய ராமனுஜதாசர், தனுஷ்கோடி, மகாலிங்கம் பங்கேற்றனர்.