/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மேல்மலையனுார் ஒன்றியக்குழு கூட்டம்
/
மேல்மலையனுார் ஒன்றியக்குழு கூட்டம்
ADDED : மார் 20, 2025 05:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை: மேல்மலையனுார் ஒன்றியக்குழு கூட்டம், மன்ற கூடத்தில் நடந்தது. ஒன்றிய சேர்மன் கண்மணி நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார்.
மாதாந்திர வரவு, செலவு கணக்குகள் பார்வைக்கு வைக்கப்பட்டது.செஞ்சி தொகுதிக்கு ஐ.டி.ஐ., அமைக்கவும், அரசு கல்லுாரியில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா லேப் டாப் வழங்கவும் அறிவித்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
துணை சேர்மன் விஜயலட்சுமி முருகன், கவுன்சிலர்கள் நெடுஞ்செழியன், கலா, ஷாகினர்ஷத் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.