/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பெருமாள் கோவிலில் உறியடி உற்சவம்
/
பெருமாள் கோவிலில் உறியடி உற்சவம்
ADDED : செப் 17, 2025 12:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்; வைகுண்டவாச பெருமாள் கோவில் உறியடி உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி உற்சவம் நடந்தது.
இதையொட்டி நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு பெருமாளுக்கு திருமஞ்சனம் நடந்தது.
தொடர்ந்து வைகுண்டவாச பெருமாள், தாயாருடன் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மாலை 6:30 மணிக்கு கோவில் வளாகத்தில் உறியடி நிகழ்ச்சி நடந்தது. இரவு 7:30 மணிக்கு உற்சவர் புறப்பாடு நடந்தது.