/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வளவனுார் முருகன் கோவில் ரூ.15 கோடி நிலம் மீட்பு
/
வளவனுார் முருகன் கோவில் ரூ.15 கோடி நிலம் மீட்பு
ADDED : நவ 13, 2024 12:04 AM

விழுப்புரம் ; விழுப்புரம் மாவட்டம், வளவனுார் குமாரகுப்பத்தில் சுப்ரமணியசாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான, 7.66 ஏக்கர் நஞ்சை நிலம், சாலையாம்பாளையம் கிராமத்தில் புதிய பைபாஸ் சாலை அருகே உள்ளது. அந்த நிலங்களை குத்தகைக்கு பயிர் செய்து வந்த விவசாயிகள், கடந்த 14 ஆண்டுகளாக கோவிலுக்கு குத்தகை செலுத்தாமல், நிலத்தை ஆக்கிரமித்து பயிரிட்டு வந்தனர்.
இதையடுத்து, அறநிலைய துறை உதவி ஆணையர் சக்திவேல் தலைமையில், கோவில் நிலங்கள் பிரிவு தனி தாசில்தார் ராஜன், கோவில் ஆக்கிரமிப்பு நிலங்களை நேற்று அளவீடு செய்து, 7.66 ஏக்கர் நிலத்தை மீட்டு, அறிவிப்பு பலகை வைத்தனர். வளவனுார் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

