sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

4ம் நாளாக தென் மாவட்டங்களுக்கு அணிவகுத்த வாகனங்கள்

/

4ம் நாளாக தென் மாவட்டங்களுக்கு அணிவகுத்த வாகனங்கள்

4ம் நாளாக தென் மாவட்டங்களுக்கு அணிவகுத்த வாகனங்கள்

4ம் நாளாக தென் மாவட்டங்களுக்கு அணிவகுத்த வாகனங்கள்


ADDED : ஜன 15, 2025 12:17 AM

Google News

ADDED : ஜன 15, 2025 12:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி: பொங்கல் பண்டிகையை கொண்டாட தென் மாவட்டங்களுக்கு 4வது நாளாக வாகனங்கள் அணி வகுத்து சென்றன.

தமிழக அரசு பொங்கல் பண்டிகையொட்டி, 5 நாட்கள் அரசு விடுமுறை அறிவித்துள்ளது. கடந்த 11ம் தேதி முதல் சென்னையில் வசிக்கும் தென்மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பொங்கலை கொண்டாட தங்களின் சொந்த ஊர்களுக்கு புறப்பட துவங்கினர்.

இதனால் சாலையில் கார், பஸ், வேன், ஆட்டோ, பைக் என வாகனங்கள் தொடர்ந்து அணி வகுத்து சென்றன. தென் மாவட்டங்களுக்கு சென்ற வாகனங்களுக்கு டோல் பிளாசாவில் கூடுதலாக இரண்டு லேன்கள் திறக்கப்பட்டு மொத்தம் 8 லேன்களில் போக்குவரத்து நெரிசல் இன்றி வாகனங்கள் எளிதாக கடந்து சென்றன.

விக்கிரவாண்டி டோல் பிளாசாவை கடந்த 11ம் தேதி சென்னை நோக்கி19 ஆயிரம் வாகனங்கள், தென்மாவட்டங்களை நோக்கி39 ஆயிரம் வாகனங்கள் என, மொத்தம் 58 ஆயிரம் வாகனங்கள் கடந்தன. 12ம் தேதி தென்மாவட்டத்தை நோக்கி 35 ஆயிரம் வாகனங்கள், சென்னை நோக்கி 16 ஆயிரம் வாகனங்கள் என மொத்தம் 51 ஆயிரம் வாகனங்கள் சென்றன.

நேற்று முன்தினம் தென்மாவட்டத்தை நோக்கி, 26 ஆயிரம் வாகனங்களும், சென்னையை நோக்கி 12 ஆயிரம் வாகனங்களும் என மொத்தம் 38 ஆயிரம் வாகனங்கள் சென்றன. நேற்று 4வது நாளாக தென்மாவட்டங்களுக்கு இரவு 7:00 மணி வரை 22 ஆயிரம் வாகனங்களும், சென்னை நோக்கி 10 ஆயிரம் வாகனங்கள் என மொத்தம் 32 ஆயிரம் வாகனங்கள் சென்றன.






      Dinamalar
      Follow us