/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வெள்ள நிவாரணம் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்
/
வெள்ள நிவாரணம் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்
ADDED : டிச 17, 2024 05:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: வெள்ள நிவாரணம் கேட்டு மேல் சேவூர் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செஞ்சி அடுத்த மேல் சேவூர் கிராம பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் வெள்ள நிவாரணம் கேட்டு நேற்று காலை 9:00 மணிக்கு செஞ்சி - ரெட்டணை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த செஞ்சி சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, மறியல் நடத்தியவர்களிடம் கலெக்டரிடம் பேசி நிவாரணம் பெற்று தருவதாக உறுதியளித்தனர்.
இதையடுத்து 9:40 மணிக்கு மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.