sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 கோவில் இடம் ஆக்கிரமிப்பு: கிராமத்தினர் புகார் மனு

/

 கோவில் இடம் ஆக்கிரமிப்பு: கிராமத்தினர் புகார் மனு

 கோவில் இடம் ஆக்கிரமிப்பு: கிராமத்தினர் புகார் மனு

 கோவில் இடம் ஆக்கிரமிப்பு: கிராமத்தினர் புகார் மனு


ADDED : ஜன 02, 2026 04:31 AM

Google News

ADDED : ஜன 02, 2026 04:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: திண்டிவனம் அருகே கோவில் இடத்தை ஆக்கிரமித்துள்ளோர் மீது நடவடிக்கை கோரி கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் புகார் மனு அளித்தனர்.

திண்டிவனம் தாலுகா அவணம்பட்டு மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மக்கள், கலெக்டர் அலுவலகத்தில் அளித்த புகார் மனு:

எங்கள் கிராமத்தில், ரேஷன் கடை அருகே 3 வேல்களுடன் சிறிய முருகன் கோவில் வைத்து மூன்று தலைமுறையாக வழிபாடு செய்து வருகிறோம். அங்கு முருகருக்கு கோவில் கட்ட முடிவு செய்து, அதற்கான திருப்பணிகளை பூமி பூஜை போட்டு தொடங்கினோம்.

இந்நிலையில், எங்கள் கிராமத்தைச் சேர்ந்த தற்போது சென்னையில் வசித்து வரும் தனி நபர்கள், கோவில் கட்ட இருக்கும் இடத்தில் இடையூறாக சுற்றுச்சுவர் அமைப்பதற்கான பணியில் ஈடுபடுகின்றனர்.

இதை தட்டிக்கேட்ட எங்களை மிரட்டுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து நாங்கள் கோவில் கட்டுவதற்கு உரிய அனுமதியளிக்க வேண்டும்.

இவ்வாறு அம்மனுவில் கூறியிருந்தனர்.






      Dinamalar
      Follow us