sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சிட்கோ இடத்தில் கட்டடம் கிராம மக்கள் எதிர்ப்பு

/

சிட்கோ இடத்தில் கட்டடம் கிராம மக்கள் எதிர்ப்பு

சிட்கோ இடத்தில் கட்டடம் கிராம மக்கள் எதிர்ப்பு

சிட்கோ இடத்தில் கட்டடம் கிராம மக்கள் எதிர்ப்பு


ADDED : ஜூலை 24, 2025 03:48 AM

Google News

ADDED : ஜூலை 24, 2025 03:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: சிட்கோ இடத்தில் கட்டடம் கட்ட, கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

திண்டிவனம் அருகே வெண்மணியாத்துார் கிராமத்தில் சிட்கோ தொழிற்பேட்டை, 40 ஏக்கர் பரப்பளவில் கடந்த 2018 ல் அமைக்கப்பட்டது. இந்த இடத்தில் பலர் தொழிற்சாலைகள் கட்டியுள்ளனர்.

இந்த இடத்தில் தனியார் ஒருவருக்கு, 14 சென்ட் இடம் சிட்கோ மூலம் கிரையம் செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தில் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் கம்பெனி அமைப்பதற்கு ஏற்பாடுகள் செய்தது.

இந்த இடத்தை வெண்மணியாத்துார் கிராம மக்கள் சமுதாய கூடம் கட்டுவதற்கு தருமாறு கேட்டனர். இதற்கு வருவாய்த்துறை வேறு இடம் ஒதுக்குவதாக கூறியும், கிராம மக்கள் அந்த இடத்தை கேட்டனர்.

இந்நிலையில் அந்த இடத்தில் தனியார் நிறுவனத்தினர், கட்டடம் கட்டும் பணி துவங்க நேற்று காலை வந்தனர்.

அப்போது ஊர் மக்கள் சிலர் கூடி எதிர்ப்பு தெரிவித்தனர். இதை தொடர்ந்து சம்பவ இடத்தில் ரோஷணை மற்றும் வெள்ளிமேடுப்பேட்டை போலீசார், குவிக்கப்பட்டனர்.

சம்பவ இடத்திற்கு விழுப்புரம் சிட்கோ கிளை மேலாளர் முகமதாபேகம் உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் கட்டடம் அமைக்கும் பணிமேற்கொள்ளப்பட்டது.






      Dinamalar
      Follow us