/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஒன்றிய கூட்டத்தில் சேர்மன் வெளிநடப்பு
/
ஒன்றிய கூட்டத்தில் சேர்மன் வெளிநடப்பு
ADDED : ஆக 06, 2011 02:25 AM
ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் ஒன்றிய குழு கூட்டத்தில் சேர்மன் தலைமையில் 14 கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.ரிஷிவந்தியம் ஒன்றிய குழு கூட்டம் நேற்று மாலை 3 மணிக்கு பி.டி.ஓ., அலுவலகத்தில் நடந்தது.
ஒன்றிய சேர்மன் பெருமாள் தலைமை தாங்கினார். பி.டி.ஓ.,க்கள் ஜெய்சங்கர், கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். கூட்டம் துவங்கியதும், கடந்த மூன்று மாதங்களாக ஊராட்சிகளில் வளர்ச்சிப்பணிகள் நிறுத்தி வைத்து அதற்கான நிதியை அளிக்கவில்லை என்று தி.மு.க.,- காங்.,- பா.ம.க., கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்.அதையடுத்து மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து ஒன்றிய சேர்மன் பெருமாள் தலைமையில் துணை சேர்மன் விஜயா பாண்டுரங்கன் உள்ளிட்ட தி.மு.க.,- காங்., - பா.ம.க., கவுன்சிலர்கள் 14 பேர் வெளிநடப்பு செய்தனர்.அ.தி.மு.க., மற்றும் தே.மு.தி.க., வைச் சேர்ந்த கவுன்சிலர்கள் 7 பேர் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.