/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அன்னா ஹசாரேவுக்கு கிராம மக்கள் ஆதரவு
/
அன்னா ஹசாரேவுக்கு கிராம மக்கள் ஆதரவு
ADDED : ஆக 28, 2011 11:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லூர் :திருவெண்ணைநல்லூர் அருகே அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக கிராம மக்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.
திருவெண்ணைநல்லூர் அடுத்த டி.குன்னத்தூர் கிராமமக்கள் அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஒருநாள் அடையாள உண் ணாவிரதம் இருந்தனர். அப்பகுதியின் பஸ் நிறுத்தம் அருகே காலை 8 மணிக்கு துவங்கிய உண்ணாவிரதத்திற்கு ஏழுமலை தலைமை தாங்கினார். ரேணுதேவன், முருகேசன் முன்னிலை வகித்தனர். மக்கள் இயக்கம் கிளை செயலாளர் தீர்த்தமலை மாலை 5 மணிக்கு உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். சாந்தமூர்த்தி, மணிவேல், குரு, ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.