sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஜெ., தலைமையிலான அரசு இஸ்லாமியருக்கு துணையாக விளங்கும் : அமைச்சர் சண்முகம் உறுதி

/

ஜெ., தலைமையிலான அரசு இஸ்லாமியருக்கு துணையாக விளங்கும் : அமைச்சர் சண்முகம் உறுதி

ஜெ., தலைமையிலான அரசு இஸ்லாமியருக்கு துணையாக விளங்கும் : அமைச்சர் சண்முகம் உறுதி

ஜெ., தலைமையிலான அரசு இஸ்லாமியருக்கு துணையாக விளங்கும் : அமைச்சர் சண்முகம் உறுதி


ADDED : ஆக 29, 2011 10:20 PM

Google News

ADDED : ஆக 29, 2011 10:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம் : முதல்வர் ஜெ., தலைமையிலான அ.தி.மு.க., அரசு இஸ்லாமியருக்கு உறுதுணையாக விளங்குமென அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.

முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகத்தின் சார்பில் திண்டிவனம் வேதவள்ளி அம்மாள் திருமண மண்டபத்தில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. பொதுச்செயலர் இடிமுரசு இஸ்மாயில் தலைமை தாங்கினார். மாவட்ட செயலர் ரபிதீன் வரவேற்றார். பள்ளி வாசல்களின் தலைவர்கள், செயலாளர்கள் பலரும் முன்னிலை வகித்தனர். விழாவில் கலந்து கொண்டு பள்ளிக் கல்வித்துறை, இளைஞர் நலம் மற் றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நோன்பு திறப்பு நிகழ்ச் சியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். அமைச்சர் சண்முகம் பேசுகையில், நான் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு கலந்து கொள்ளும் முதல் இப்தார் நிகழ்ச்சி இதுதான். பொதுவாழ்க்கையில் தொடர்ந்து எனக்கு ஆதரவளித்து வரும் இஸ்லாமிய சிறுபான்மை மற்றும் பொதுமக்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சிறுபான்மை மக்களுக்கு ஜெ., என்றுமே ஆதரவாக இருந்து வருகிறார். முதல்வர் ஜெ., தலைமையிலான அ.தி.மு.க., அரசு இஸ்லாமிய மக்களுக்கு தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் என்றார். நிகழ்ச்சியில் டாக்டர் அரிதாஸ் எம்.எல்.ஏ., அ.தி.மு.க., நகர செயலாளர் வெங்கடேசன், கவுன்சிலர் அப்பாஸ் மந்திரி, வழக்கறிஞர் அம்ஜத்அலி மற்றும் முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நகர செயலாளர் ஷேக் அப்துல்லா நன்றி கூறினார்.










      Dinamalar
      Follow us