sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சாலை மறியல் செய்த 40 பேர் மீது வழக்கு

/

சாலை மறியல் செய்த 40 பேர் மீது வழக்கு

சாலை மறியல் செய்த 40 பேர் மீது வழக்கு

சாலை மறியல் செய்த 40 பேர் மீது வழக்கு


ADDED : ஆக 11, 2011 11:10 PM

Google News

ADDED : ஆக 11, 2011 11:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம் : சாலை மறியல் செய்த 40 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

திண்டிவனம் நேதாஜி நகரை சேர்ந்த சிவக்குமார் மனைவி கல்பனா, 37. இவர் கடந்த 9ம் தேதி இரவு அதே பகுதியில் உள்ள மின்சார அலுவலகம் அருகே சாலையை கடந்தபோது திண்டிவனம் நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்தார். சென்னை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் இறந்தார். விபத்து குறித்து தகவலறிந்த நேதாஜி நகர், விவேகானந்தா நகரை சேர்ந்த பொதுமக்கள் ஆத்திரமடைந்து, திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுத்தியதாக வி.ஏ.ஓ., சேகர் கொடுத்த புகாரின் பேரில் விரிவுரையாளர் சவரிமுத்து, வழக்கறிஞர்கள் சாண்டில்யன், திலீபன் உட்பட 40 பேர் மீது திண்டிவனம் போலீசார் வழக்குப் பதிந்தனர்.








      Dinamalar
      Follow us