ADDED : ஆக 11, 2011 11:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் அடுத்த ஆதிச்சனூர் கிராமத்தை சேர்ந்தவர் சாமிநாதன், 62.
நேற்று முன்தினம் தனது வீட்டில் மோட்டார் போடுவதற்காக ஸ்டாட்டரை அழுத்தினார். அப்போது மின்சாரம் தாக்கிய அவரை, உடனடியாக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். புகாரின் பேரில் அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.